வேதாரண்யம். ஜன.13. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விஜயேந்திரன் கஜேந்திரன் ராஜகுரு ஸ்டாலின் ஆகிய நான்கு மீனவர்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கி மீன்பிடி வலை மற்றும் பொருட்களை பறித்துச் சென்றனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கியதில் விஜயேந்திரன் என்பவரின் முதுகில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் உள்ளார்..கடலோர காவல்படை மற்றும் வேதாரண்யம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.