ஈரோடு, டிச. 17- அவிநாசி அத்திக்கடவு திட்டப் பணிகள் முடிந்து விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித் துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் அத்திக் க்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ் ணனுண்ணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்குப் பின் அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொண் றிற்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதித்து கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட் டங்களில் வறட்சியால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு அனுப்புவதே அத்திக்கடவு-அவிநாசி திட்ட மாகும். 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் 32 பொதுப் பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகை யில் இத்திட்டம் வடிவமைக்கப்பட் டுள்ளது.
இதில் மொத்தம் 958 கி.மீ நீளம் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது 600 குளங்களுக்கு நீர் செல்லும் வகையில் பணிகள் முடிக் கப்பட்டுள்ளது. மீதமுள்ள 445 குளங்களுக்கு நீர் செல்ல குழாய் கள் பதிக்கும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு விரைவாக பணிகள் முடிக் கப்படும். இந்த திட்டத்தில் மெயின் குழாயின் நீளம் 106.8 கி.மீ. அதன் பணிகள் முழுவதுமாக முடிக்கப் பட்டுவிட்டது. இதில் 6 நீருந்து நிலை யங்கள் வருகிறது. பவானி ஆற்றின் குறுக்கே திருப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டன் பாளையம், திருவாச்சி, போல நாயக்கன்பாளையம், எம்மாம் பூண்டி, அன்னூர் என ஆறு நீர் உந்து நிலையங்களுக்கான கட்டு மானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வரு கின்றது. தற்சமயம் சுமார் 61.35 கி.மீ. அளவு (மொத்த நீளம் 63.15 கி.மீ) பணிகள் முடிக்கப்பட் டுள்ளன. நிலம் பயன்பாட்டு உரிமை பெறும்பணி 100 விழுக்காடு முடிவுற் றுள்ளது. குளம் குட்டைகளில் வெளிப்புற அமைப்பு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.1603.66 கோடி அளவில் செலவீனம் மேற்கொள் ளப்பட்டுள்ளது. விரைவில் பணி கள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட் டுள்ளது என தெரிவித்தார்.