districts

img

சிவகங்கையில், “நான் முதல்வன்” திட்ட பயிற்சி கருத்தரங்கம்

சிவகங்கை, ஜூலை 29- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அறிவியல் வளாக  கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டம் தொடர்பாக, கல்லூ ரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர் களுக்கு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பேசு கையில், பள்ளிப்படிப்பில் மாணாக்கர்கள் படிக்கும் போது, உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது  பற்றிய போதுமான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டும், கல்லூரிகளில் பயின்று வரும் மாணாக் கர்கள் குறிப்பாக, கிராமப்புறங்களைச் சார்ந்த மாணாக்  கர்களுக்கு பயனுள்ள வகையிலும், “நான் முதல்வன்” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் முதல்வன் இயங்குதளமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு கள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய  தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்க மாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் தொழில் இலக்குகளை அடைந்திடவும், மாணாக்கர்களுக்கு ஆர்வமுள்ள துறையினை தேர்ந்தெடுத்து இதன்மூலம் தொழில்  நுட்ப நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சி யினை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், கல்லூரிப் பேராசி ரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.