districts

நகைக்காக நான்கு வயது சிறுவனை கொன்றேன்

நாகர்கோவில், ஜன.23- மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டினம் பகுதியில் 4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் பூட்டி வைத்தது ஒன்றரை பவுன் நகைக்காக என்று கைதான பெண் வாக்கு மூலம் அளித்துள்ளார். மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டினம் பாத்திமா தெரு வைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. இவர் சவுதி அரேபியாவில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இவர்களது மகன் ஜோகன் ரிஷி (4). இவர்களுக்கு இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. ஜன.21 வெள்ளியன்று வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டி ருந்த ஜோகன் ரிஷி மதியம் திடீ ரென மாயமானார். இதையடுத்து சிறுவனை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி னார்கள் .ஆனால் ஜோகன் ரிஷி பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதையடுத்து அவரது தாயார் சகாயசில்ஜா மணவா ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

சிறுவன் ஜோகன் ரிஷியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத் தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா மீது போலீசா ருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீ சார் அவரிடம் விசாரணை நடத்த வீட்டிற்கு சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அங்கிருந்த அவ ரது குழந்தைகளிடம் விசாரித்த போது தனது தாயார் நகை களை அடகு வைக்க வெளியே சென்று இருப்பதாக கூறினர்.  இதையடுத்து காவல்துறையின ருக்கு சந்தேகம் அதிகமானது. காவல்துறையினர் பாத்திமா வை பிடித்து விசாரணை நடத்தி னார்கள். அப்போது நகைக்கு ஆசைப்பட்டு ஜோகன் ரிஷியை கழுத்தை நெரித்து கொன்று பீரோ வில் மறைத்து வைத்திருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி  அடைந்த காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்தபோது ஜோகன் ரிஷி பிணமாக இருந்தார்.

ஜோகன் ரிஷி உடல் பீரோவில் இருந்து மீட்கப்பட்டது. ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனை யில் குழந்தையின் உடற்கூறா ய்வு செய்யப்பட்டது. ஜோகன் ரிஷி, பாத்திமாவால் கொலை செய்யப்பட்டதை அறிந்த பொதுமக்கள் அவரது வீட்டை சூறையாடினார்கள். காவல்துறையின் பிடியிலிருந்த பாத்திமாவை பொதுமக்கள் தாக்க முயன்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரி வித்து அந்த பகுதியில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் போலீசார் சமரசம் செய்தனர். இந்த நிலையில் கைது செய்  யப்பட்ட பாத்திமாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண் டனர். அவரது கணவர் சரோ பினிடமும் விசாரணை நடத்தப் பட்டது. கைது செய்யப்பட்ட பாத்திமா காவல்துறையினரிடம் அளித் துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது: ஜோகன் ரிஷி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனை கொஞ்சுவது போல் நடித்தேன். பின்னர் அவன் அணிந்திருந்த நகைகளை கழற்றி னேன். அப்போது ஜோகன் ரிஷி கூச்சலிட்டான். இதையடுத்து அவன் வாயில் துணியை திணித் தேன். பின்னர் அவன் அணிந்தி ருந்த நகைகளை கழற்றிய போது ஜோகன் ரிஷி மயங்கி விழுந்தான். அவனை பரிசோ தித்த போது ஜோகன் ரிஷி பேச்சு மூச்சு இன்றி இருந்தான்.

இத னால் என்ன செய்வது என்று தெரி யாமல் திகைத்தேன். இதைய டுத்து ஜோகன் ரிஷியை வீட்டிலி ருந்த பீரோவில் பூட்டி வைத் தேன். இரவு யாருக்கும் தெரியாமல் கடலில் வீசி விடலாம் என்று திட்டம் தீட்டினேன். ஆனால் குழந்தையைக் காணாமல் அவ ரது பெற்றோரும் உறவினர்களும் காவல்துறையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். இரவு கடற்கரை பகுதியில் சுற்றி வந்தனர். இதனால் என்னால் ஜோகன் ரிஷியின் உடலை கடல் பகுதிக்கு எடுத்துச் செல்ல முடிய வில்லை. காலையிலும் எப்படி யாவது கடலில் வீசி விடலாம் என்று நினைத்தேன். கடலில் வீசி விட்டால் குழந்தை கடல் அலை யில் சிக்கி இறந்து விட்டதாக நாட கமாடி விடலாம் என்று நினைத்து திட்டத்தை தீட்டினேன். ஆனால் எனது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை ஜோகன் ரிஷியின் நகைகளை அடகு வைக்க தனி யார் வங்கிக்கு சென்றேன்.

அப்போது காவல்துறையினர் என்னை கைது செய்து விட்டனர் என தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பாத்திமா விடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது கணவர் சரோபினிடமும் விசாரணை நடத் தப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப் பட்ட பாத்திமா மீது ஏற்கனவே நகை மோசடி வழக்கு ஒன்று உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன் றில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் கடன் பெற் றுள்ளார். இது தொடர்பாக  நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.