districts

img

தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமித்திடுக!

இராமேஸ்வரம்,ஜூன் 9-  இராமேஸ்வரம்-பாம்பன் நகரப் பேருந்துகளை அதிகம் இயக்க வேண்டும். நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலத்தில் வாழும் அய்யன் தோப்பு பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின்சார தடையை சரி செய்ய வேண்டும்.ரேசன் கடைகளின் முறைகேடுகளை ஒழுங்குபடுத்த வேண்டும். தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமேஸ்வரம் தாலுகா, தங்கச்சிமடம்  பஞ்சாயத்து கட்சி  கிளை களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தங்கச்சிமடம் தாலு காக்குழு உறுப்பினர் வி.பழனிக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ‌க.கருணாகரன், தாலுகா செய லாளர் ஜி.சிவா ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.ஜஸ்டீன்,ஏ.ஆரோக் கிய நிர்மலா, தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஏ.அசோக்,ஏ.ஜேம்ஸ் ஜஸ்டீன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;