districts

img

இளநிலை தட்டச்சு தேர்வு: ஆண்டிப்பட்டி மாணவி மாநில முதலிடம்

தேனி, ஜன.8- இளநிலை தட்டச்சு தேர்வில்  ஆண்டிபட்டி மாணவி மோனிஷா  மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  2022 ஆம் ஆண்டு தொழில்நுட்ப  கல்வி இயக்கத்தின் தட்டச்சு  தேர்வு முடிவுகள் ஜனவரி 6 அன்று  வெளியிடப்பட்டது.தமிழகத்தில் 83 ஆயிரத்து 412 பேர் இளநிலை தட்டச்சு தேர்வு எழுதினர்.  இதில் ஆண்டிப்பட்டியில் உள்ள அன்பு ஸ்கூல் ஆஃப்  காமர்ஸ் பயிற்சிப்பள்ளியில் படித்த  மாணவி எஸ்.மோனிஷா என்பவர்  தட்டச்சு ஆங்கிலம் இளநிலை  தேர்வில்  மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அம்மாணவிக்கு  பயிற்சிப்பள்ளி உரிமை யாளர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.