மதுரை, பிப். 23 - திண்டுக்கல் அரசு மருத் துவமனை துணைக் கண்கா ணிப்பாளர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், மதுரை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி யை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள் ளனர்.
அங்கித் திவாரி தனக்கு ஜாமீன் கோரி இரண்டுமுறை விசாரணை நீதிமன்றத்தில் முறையிட்டும் ஜாமீன் கிடைக்க வில்லை. இதனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு வெள்ளி யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்க றிஞர், அங்கித் திவாரி மீதான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கா லத் தடை விதித்துள்ளது. அத னால் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மற்றபடி குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட் டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அங்கித் திவா ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி விசாரணையை மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.