districts

img

காலிப்பணியிடங்களை நிரப்புக! அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர்கள் போராட்டம்

சிவகங்கை, மார்ச் 28- அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்  பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்  வாடி மையங்களை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர் களுக்கு கூடுதல் பொறுப்பாக பணிசெய்ய வலி யுறுத்துவதை கைவிட வேண்டும்.  அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையு மின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அங்  கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் கல்லல், திருப்பத்தூர், மானாமதுரை, சிங்கம்புணரி ஆகிய மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்லலில் மாவட்ட செயலாளர் பாக்கியமேரி , மாவட்ட இணைச் செயலாளர் சசிகலா, சிஐடியு மாவட்ட பொருளா ளர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்புத்தூரில் மாவட்ட பொருளாளர் லெட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய மங்கலம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சேது ராமன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மானாமதுரையில் மாவட்ட துணைத் தலைவர் தவமலர்,மாவட்ட சிஐடியு இணைச் செயலாளர் ஏ.விஜயகுமார் ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிங்கம்புணரி யில் மாவட்ட துணைத் தலைவர் கௌசல்யா, சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் முரு கேசன், மாவட்ட இணைச் செயலாளர் கலைச்  செல்வி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இராமநாதபுரம் 

மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  மாவட்ட செயலாளர் கே.மல்லிகா தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்ட துணை செயலாளர் சேம்ஸ் அனிட்டா ஆகி யோர் பேசினர். ராமநாதபுரத்தில் மாணிக்கவல்லி அவர் கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  திருப்புல்லாணியில்  மாவட்ட தலைவர் உமாதேவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்எஸ் மங்கலம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு மாநில செயலாளர் சாந்தி உட்பட வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருவாடானையில் மாவட்ட பொருளாளர் கலாவதி தலைமையில் நடைபெற்றது. பரமக்  குடி போகலூர், நயினார் கோயில் என மாவட்  டத்தில் வட்டார தலைநகரங்களில் திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் பங்கேற்போடு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   

சின்னாளப்பட்டி 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சிஐடியு மாவட்ட தலைவர் சாதிக் அலி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   நத்தத்தில் வட்டாரத் தலைவர் நித்தியா தலை மையில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.  திருவில்லிபுத்தூர்  திருவில்லிபுத்தூர் சமூக நலத்துறை அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொரு ளாளர் பூங்கொடி தலைமை வகித்தார். வட்டா ரக் கலை தலைவர் முனியம்மாள் முன்னிலை வகித்தார் சிஐடியு தலைவர் ஜெயக்குமார் ஆத ரித்துப் பேசினார்.

 

;