மதுரை, ஜூன் 24- மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் திட்டப்பணிகளை ஆய்வு மேற் கொண்டு, மக்கள் சந்திப்பு குறைதீர் முகாம்களில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பங் கேற்றார். மக்களை சந்தித்து நேரில் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மதுரை அய்யர்பங்களா சாலையில் உள்ள உச்சபரமேடு பாண்டியன் மஹாலில் சனிக்கிழ மையன்று நடைபெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் டி.நாகராஜன், மாநக ராட்சி ஆணையாளர் கே.ஜே.பிர வீன்குமார், கிழக்கு மண்டல தலை வர் வாசுகி சசிகுமார், கிழக்கு மண் டல துணை ஆணையாளர் காளி முத்தண்ணன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேற்கு ஒன்றியச் செயலாளர் பி. ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஜெக நாதன், எஸ்.நாகராஜ், சரஸ்வதி பாண்டியன், முருகேசன்,தனபால், சிஐடியு சௌந்தர்,மற்றும் மாநக ராட்சி அதிகாரிகள் கலந்து கொண்ட னர். எம்.பியிடம் மக்கள் அளிக்கும் மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த முகாமில் மக்கள், பாதாள சாக்கடை பணி , பேருந்து வசதி, பட்டா மாறுதல், குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின் இணைப்பு வசதி, ஊன முற்றோர்க்கான உதவி உள்ளிட்ட பல்வேறு மனுக்களை நாடாளு மன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.
38 வருடமாக மின்வசதி இல்லாத பகுதிக்கு உடனடி தீர்வு
ஆதிதிராவிடர் நலத்துறையில் இருந்து வழங்கப்பட்ட இடத்திற்கு பட்டா, சொத்துவரி, வீட்டுவரி எது வுமே இல்லாத காரணத்தினால் கிட் டத்தட்ட 40 வருடங்களாக மின்வசதி உட்பட அடிப்படை வசதிகள் இல் லாமல் வாழ்ந்து வந்த மக்க ளுக்கு மனு அளித்த அன்றே தீர்வு காணப்பட்டது. இதுகுறித்து செல்லப்பேச்சி என்பவர் கூறுகையில், நாங்கள் இந்த பகுதியில் 14 வருடங்கள் வசிக்கின்றோம். என் கணவர் குடும்பம் 25 ஆண்டுகளுக்கு மேலாக மின்வசதி இல்லாமல் வசித்து வந்தனர். நான் வந்து 14 வருடங்களுக்கு பின்பு தற்போது வரை எந்தவித அடிப்படை வசதி களும் இல்லாமல் வாழ்ந்து வந் தோம். இந்த நிலையில் தான் இந்த முகாம் குறித்து தகவல் தெரிந்து மனு அளித்து விட்டு செல்வோம் என்று தான் வந்தோம். ஆனால் இப்படி உடனடியாக பட்டா வழங்கி எங்களை நெகிழ்ச்சி அடைய செய் வார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை நான், எங்கள் பகுதி மக்கள் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுளோம் என்று கண் கலங்கி கூறினார். இஸ்திரி பெட்டி கேட்டு மனு அளித்த நபருக்கு பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் உடனடியாக பெட்டி ஏற்பாடு செய்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் பயனாளிக்கு வழங்கினார்.
மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வழங்கல்
மதுரை காஞ்சரம்பேட்டையை சேர்ந்த பெரியகருப்பன் மகன் பி. அழகன் என்பவருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஊன்று கோல் கேட்டு மனு அளித்தார். அவருக்கு உடனடி யாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் வழங்கப்பட்டது. அதேபோல் மதுரை கோசா குளம் பாண்டியன் நகர் திருவள்ளு வர் தெருவை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் காதொலி கருவி கேட்டு மனு அளித்தார். உடனடி யாக அவருக்கு மாற்றுத்திறனாளி கள் நலத் துறை சார்பில் காதொலி கருவியினை எம்.பி. அதிகாரிகள் முன்னிலையில் வழங்கினார்.
உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா
மதுரை மாநகராட்சிக்கு உட் பட்ட உச்சப்பரம்பு மேடு பகுதி யினை சேர்ந்த மக்கள் 5 பேருக்கு வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்கப்பட்டது. அதேபோல் கண்ணனேந்தல் பகுதியினை சேர்ந்த 2 பேருக்கு கூட்டு பட்டா வாக இருந்ததை தனி பட்டாவாக மாற்றி உடனடியாக வழங்கப்பட் டது. மற்ற பட்டா கேட்டு மனு அளித்த நபர்களுக்கு அடுத்த வாரத்திற்குள் பட்டா வழங்கப் படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர். மதுரை மாநகராட்சிக்கு உட் பட்ட பனங்காடி அருகே உள்ள கருப்பையாபுரம் பகுதியில் மின் விளக்கு வசதி கேட்டு மனு அளித்த னர். உடனடியாக மின்சார துறை அதிகாரிகளை அழைத்து அடுத்து வாரத்திற்குள் மின் விளக்கு வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என எம்.பி., கேட்டுக்கொண்டார். அதிகாரிகளும் அதற்கு விரைவில் ஏற்பாடு செய்து விடுவோம் என்று உறுதியளித்தனர். இறுதியாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசு கையில், இந்த முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கிட்டத்தட்ட 1 வருடமாக இந்த மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மதுரை புறநகர் பகுதியான நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி களில் மேலூர், கொட்டாம்பட்டி, கிழக்கு சட்டமன்ற தொகுதி என அனைத்து கிராமங்களிலும் மக் களை சந்தித்து மனுக்களை பெற்று உடனடியாக தீர்க்கக் கூடிய பிரச்ச னைகளை தீர்த்து வைத்தது மக்க ளுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்பு கிறோம். இந்த முகாமில் மட்டும் 300- க்கும் மேற்பட்ட மனுக்களை மக்கள் அளித்துள்ளனர். அதில் உடனடியாக தீர்க்கக்கூடிய மனு வினை உடனடியாக தீர்த்து வைத்து தீர்வு கண்டோம்.இந்த முகாம்கள் வெறும் மனுவை மட்டும் பெற்றுச் செல்வது என்றால் விரைவாக முடித்திருக்கலாம். இது மனுவை பெறுவது மட்டுமல்ல இந்த முகா மின் நோக்கம், எவ்வளவு நேரத் தில், எத்தனை நாளில் மக்கள் அளித்த மனுவிற்கு தீர்வு காண்பது என்பது தான் இந்த முகாமின் முக்கிய நோக்கம்! அது மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பதே மக்கள் மத்தியில் தெரிகிறது. இதுவே மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களுக்கு செய்யக் கூடிய மிகப்பெரிய உதவி என்று நான் நினைக்கிறன். இந்த முகாமில் கலந்துகொண்ட 14 துறை அதிகாரி களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அரசு துறைக்கு எனது நன்றியினை பாராட்டுகளை தெரிவித்துக்கொள் கிறேன் என்று கூறினார்.