சென்னை, ஜூலை 25 - அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்க ளுக்கு இடையிலான இலக்குப் பந்து போட்டி சவிதா நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் நடை பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் நாக் அவுட் முறையிலும், பெண்கள் பிரிவில் லீக் முறை யிலும் போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை சென்னை சவீதா பல்கலைக் கழகம், இரண்டாம் இடத்தை ஆந்திரா யூனிவர்சிட்டி - விசாகப்பட்டினம், மூன்றாம் இடத்தை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் - சென்னை, நான்காம் இடத்தை ஐஐஎம்டி யுனிவர்சிட்டி - மீரட் ஆகியவை பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை சென்னை சவீதா பல்கலைக்கழகம், இரண்டாம் இடத்தை ஆந்திரா பல்கலைக்கழகமும், மூன்றாம் இடத்தை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகமும் பிடித்தன. பரிசளிப்பு விழாவில் பல்கலை கழக வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன், இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக், உடற்கல்வி துறையின் தலைவர் வே.வாழ்வீமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.