சுட்டிக்காட்டினால் தரக்குறைவாக பேசுவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மதுரை, ஜூன் 27- மதுரை மாநகராட்சிக்கூட்டத் தில் அதிமுகவினரின் தரக்குறை வான நடவடிக்கைகளுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப் பில் இருந்தது அதிமுக நிர்வாகம். அப்போது நடைபெற்ற மாநகராட்சி பணிகளை தணிக்கைக்குழுவுக்கு அனுப்பாமல் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிற்கு ஒன்றிய, மாநில அரசுகளிடம் இருந்து வரவேண்டிய தணிக்கை துறைக்கான தொகை பெறப்படாமல் மதுரை மாநகராட்சி யினை பெரும் நிதி நெருக்கடி சுமைக்கு தள்ளியது அதிமுக நிர்வா கம். இன்றைக்கு பணிகள் நடை பெறவில்லை என்று கூறும் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா, மதுரை மாநகராட்சி பகுதி யில் 13 கால்வாய்கள் தூர்வாரப்பட வில்லை என்றும் அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை
என்றும் குற்றச்சாட்டை முன்வைக் கின்றார். கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி பொறுப்பில் யார் இருந் தது என்பது அவருக்கு தெரியாதா? இதை தற்போதுள்ள திமுக தலை மையிலான மாநகராட்சி நிர்வா கம் சுட்டிக்காட்டினால் அதை பார்வையாளர் பகுதியில் இருந்த சோலைராஜாவின் மகன் இளவர சன் அவை நடவடிக்கைக்கு குந்த கம் விளைவிக்கும் வகையிலும் கட்டுப்பாட்டை மீறியும் மாமன்ற உறுப்பினரை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். ஒரு பார்வையாளர் அவையில் என்ன நடக்கிறது என் பதை மட்டும் தான் கவனிக்க வேண் டும். அதை மீறி அவை நடவடிக்கை யில் குறுக்கிடுகிறார்கள் என்றால் இது நாகரிகமாக இருக்குமா? இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? திமுக கூட்டணியில் உள்ள மதி முக சட்டமன்ற உறுப்பினர் மு. பூமி நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை மேயர் டி. நாக ராஜன் ஆகியோர் தங்கள் பகுதி களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த குறை களுமே கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் இன்றைக்கு அந்த பணி கள் மிகப்பெரும் நெருக்கடியில் வந்து நிற்கின்றது .மக்கள் பிரதிநிதி களாகிய அவர்களை மக்கள் கேள்வி கேட்கின்றார்கள். இதை சுட்டிக்காட்டித்தான் அவர்கள் பேசி யது. இதை ஒரு கருப்பொருளாக எடுத்துக் கொண்டு அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சோலைராஜா பேசியுள்ளார்.
அனைத்து மக்கள் பிரதிநிதி களுக்கும் கேள்வி கேட்பதற்கும் அதற்கு பதில் கூறுவதற்கு மாநக ராட்சி மேயருக்கும் உரிமை உள் ளது. எனவே அந்த அடிப்படை யில் அவர்கள் கேட்ட கேள்விக்கு மேயரும் பதில் அளித்து விட்டார். தற்போது மதுரை மாநகராட்சி பகு திகளில் முழுவதும் பாதாளச் சாக் கடை பணி மற்றும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது , சாலைகள் போடப்படாமல் உள்ளது என்று தொடர் பிரச்சனைகளுக்கு கடந்த கால அதிமுக அரசின் நிர்வாகமே காரணம். அதைத்தான் திமுக உள் ளிட்ட மற்ற கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். இந்த விவாதத்தை கூட பார்வை யாளர் பகுதியில் இருக்கும் அதி முகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் இவர்கள் எப்படி மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப் பார்கள்? மக்கள் அடிப்படை பிரச்ச னைகளை இவர்களிடம் கூறினால் அவர்கள் மீது இதுபோல்தான் பாய்வார்களா என்று தெரிய வில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் டி. குமர வேல், அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததும் 2011 முதல் 2016 வரை பொறுப்பில் இருந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநக ராட்சி பகுதிகளில் சரியான கவ னம் செலுத்தாத காரணமாகத் தான் தற்போதுள்ள அடிப்படை பிரச்ச னைகளை நாம் சந்தித்து வரு கிறோம் என்று சுட்டிக்காட்டினால் இப்படி மாமன்ற உறுப்பினரே அல் லாத ஒருவர் மாமன்ற உறுப்பினர் களை தரக்குறைவாக பேசுவது பெரும் கண்டனத்திற்குரியது. தற்போதுள்ள மாமன்ற கூட்ட அரங்கில் அதிமுகவிற்கு எதிர்க் கட்சிக்கான இடத்தினை ஒதுக்கிட வேண்டும் என்று சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இப்படி ஜனநாயகப்பூர்வமாகத் தான் எதையும் சந்திக்க வேண்டும். இதுதான் கடந்த கால அனுபவம். அந்த அடிப்படையில் வரும் காலங் களில் மக்கள் குறைகளை பேசுவ தற்கு மட்டுமே மாநகராட்சி இருக்க வேண்டும் அதில் மக்கள் குறை களை மட்டும் பேசுவோம் நாகரி கத்தை கடைப்பிடிப்போம். மதுரை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப பாதாள சாக்கடை அமைப்பு பணியை கடந்த கால அதிமுக மாநகராட்சி நிர்வாகம் செய்யாத ஒரு போக்கும் இருந்தது. எங்கே எவ்வளவு பெரிய அளவு பைப் போட வேண்டும். எங்கே பாதாள சாக்கடை கழிவு நீரேற்ற நிலையம் அமைக்க வேண்டும் என்ற ஏற்பாட் டினை தவிர்த்து ஒரு புரையோடி போன நிர்வாகத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடைப் பிடித்ததன் காரணமாக இன்றைக்கு மதுரை மாநகர மக்கள் கஷ்டப்பட வேண்டிய நிலைமைக்குள் உள் ளாகியுள்ளனர்.
ஆக்கப்பூர்வமாக பேசும் மார்க்சிஸ்ட் கட்சி
வைகை ஆற்றை முறையாக சர்வே செய்து அதனுடைய ஆக்கிர மிப்புகளை அகற்றுவதற்கான நட வடிக்கைகள் எடுக்காத நிலையில் வைகை ஆறு இன்றைக்கு ஓடை யாக மாறிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் மக்களு டைய குறைகளை கண்டு கொள்ளா மல் குறட்டைவிட்டு தூங்கி விட்ட அதிமுக, ஒரு முறையான எதிர்க் கட்சியாக இல்லாமல் முரண்டு பிடிக்கும் கட்சியாக குழப்பத்தை ஏற்படுத்தும் கட்சியாக இருந்து வரு கிறது. அதிமுக, மாநகராட்சி பணி யாளர்களின் ஊதியம் சம்பந்தமா கவோ. கழிவுநீர், மலக்குழி தொட்டி களில் இறங்கி பணியின் போது இறந்த தொழிலாளர்களுக்காக எந்த போராட்டத்திலும் தலையீடு செய்யாமல் வேதனைப்பட்ட மக் களை வேடிக்கை பார்த்தது அதி முக. ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது தூய்மைப்பணியளர் களுக்கு நவீன கருவிகளை வாங்காமல் இன்றைக்கு மாநக ராட்சியின் அவை நடவடிக்கை களுக்கு எதிராக பேசுவது சரி யாக இல்லை. மதுரை மாநகராட்சி நிர்வாகம் மீதான விமர்சனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்து வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பு கிறோம். அதே நேரத்தில் ஆக்கப் பூர்வமாக மக்களுடைய பிரச்ச னைகளை முன் வைக்கிறோம் .நிர் வாகச் சீர்கேட்டை களைவதற்கான ஆலோசனையை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முன் வைக்கிறோம். ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தும் கட்சியாக மாமன்ற உறுப்பினர்களாக செயல் பட்ட நீண்ட நெடிய வரலாற்றை மதுரை மக்கள் அறிவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.