பிரயோஜனமில்லாத மடையால் விவசாயம் பாதிப்பு காளையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் சிவகங்கை, மே 12- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் கருங்காலி, கல்குளம் கிராமங்கள் உள்ளன. இங்கு பல லட்சம் ரூபாய் செலவில் மடை கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாள் முதல் கண்மாய் தண்ணீர் வெளியேறியது. விவசாயம் பொய்த்துப் போனது. மடை கட்டப்பட்டும் பலனில்லாததால் மூன்று ஆண்டுக ளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மடையையை மேம்படுத்தித் தர வேண்டும். கலுங்குளை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காளையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் ஒன்றியச் செயலாளர் சாத்தப்பன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் வீர பாண்டி, துணைத் தலைவர் அழகர்சாமி, மாவட்டச் செயலா ளர் மோகன், துணைச் செயலாளர் அண்ணாத்துரை, மாவட்டப் பொருளாளர் விஸ்வநாதன், சேதுராமன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தென்னரசு, காளையார் கோவில் ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு, வேங்கையா, சீனிவாசன் உட்பட 300 பேர் கலந்துகொண்டனர்.