districts

img

நிலுவையின்றி ஊதியம் வழங்க கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

அருப்புக்கோட்டை, ஜூன்.13- அருப்புக்கோட்டையில் காலதாமதமின்றி ஊதியம் வழங்க கோரி விவசாயத் தொழிலாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி கள் நடைபெற்று வருகின் றன. இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊதி யம் முறையாக வழங்கப்படு வதில்லை. காலதாமதமாக வழங்கப்படுகிறது. மேலும்,  ஒரு பகுதியில் வேலை செய் யும் தொழிலாளர்களுக்கு 4  விதமாக ஊதியம் வழங்கப் படுகிறது. எனவே, முரண்பாடுடன் ஊதியம் வழங்க கூடாது. நிலுவையின்றி உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். சட்டப்படி ரூ.294 சம்பளமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு நடைபெற்ற இப் போராட்டத்திற்கு ஒன்றி யக்குழு உறுப்பினர் ஏ.ராம லட்சுமி தலைமையேற்றார். துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம். கணேசன் பேசினார். முடி வில் மாவட்டத் தலைவர் எஸ். பூங்கோதை உரையாற்றி னார். மேலும் இதில் விவசாயி கள் சங்கத்தின் ஒன்றி யச்செயலாளர் காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்  டனர்.