தேனி, ஜூலை 5- இளைஞர்-மாணவர் வாழ்க்கை யை சீரழிக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இடதுசாரி இளை ஞர், மாணவர் அமைப்பு சார்பில் தேனி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் இரா.தமிழ்ப்பெருமாள் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் சி. முனீஸ்வரன் முன்னிலை வகித்தார். புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட செயலாளர் உதுமான் அலி, அகில இந்திய மாணவர் பிளாக் தேசியக் குழு உறுப்பினர் திவாகரன், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி.நாகராஜ் ,அகில இந்திய ஜன நாயக இளைஞர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாண்டி , அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.திவ்யா ஆகி யோர் பேசினர். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஆர்.லெனின் நிறைவு செய்து பேசினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வேல் பிரகாஷ், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் சௌந்தரபாண் டியன், மதன்குமார் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அட்வகேட் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தட்சிணாமூர்த்தி மற் றும் நிர்வாகி கார்த்தி, மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி வசந்த், இளைஞர் பெருமன்ற மாவட்ட நிர்வாகி சண் முகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.