districts

img

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் நடைபெற்ற மாறுதல் மற்றும் பதவி உயர்வு

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் நடைபெற்ற மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் முடியும் தருவாயிலும் அக்டோபர் மாதத்திற்கான ஊதியம் இதுநாள் வரை வழங்கப்படவில்லை.பள்ளிக்கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் பெற்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காத பள்ளிக்கல்வித் துறை ஆணையரின் அலட்சியப் போக்கை கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்கக்கோரியும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதனன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.