districts

img

மனைப்பட்டா கிடைக்காத ஆதியன் மக்கள்

கடலூர், மார்ச் 16- திட்டக்குடி வட்டம் ராமநத்தம் கிராமத்தில் காந்தி நகரில் 20 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இந்து ஆதியன் பழங்குடி மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் வட்டச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அபோது அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்ப தாக எழுத்து பூர்வமாக வழங்கியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், விவசாய சங்கத் தலைவர் ஆர்.மகாலிங்கம், கிளை செயலாளர் எல்.மாயவன், வட்டக் குழு உறுப்பினர்கள் டி.வரதன், ஆர்.அரவிந்த், மாயவேல் ஜி.ராஜ்குமார், மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.