சின்னாளபட்டி,டிச.29- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் யூனியனின் மாதாந்திர கூட்டம் சேர்மன் மகேஷ்வரி முருகேசன் தலைமையில் நடைபெற்றது .துணை சேர்மன் ஹேம லதா மணிகண்டன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் யூனியன் சேர்மன் பேசுகை யில், ஆத்தூர் ஒன்றியத்தில் பல பணிகள் கிடப்பில் உள்ளன. கடந்த காலங்களில் யூனியனில் இருந்த நிதியைக் கொண்டு அடிப்படை வசதிகளை செய்துள்ளோம். தற்போது 2022 ஆம் ஆண்டில் அனைத்து கிராம ஊராட்சியிலும் அடிப்படை வசதி களை செய்ய கூடுதல் நிதி தேவை என்று தெரிவித்தார். கவுன்சிலர் காணிக்கை சாமி, ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 82 அரசுப் பள்ளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அப்புறப்படுத்த வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி, கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரி சீலனை செய்யப்படும் என்றார். ஆணை யாளர் தட்சிணாமூர்த்தி, மேலாளர் முரு கன் உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.