தூத்துக்குடி,மார்ச் 26 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியை அடுத்துள்ள இடைசெவல் கிராமத் தைச் சேர்ந்த கரிசல் மண் எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் அவர்களுக்கு நினைவரங்கம், சிலை மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறி வித்தார். அதைத்தொடர்ந்து கோவில்பட்டியில் 150.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வரும் நினைவரங்கம் கட்டும் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகி யோர் உடனிருந்தனர். பின்னர் பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முத லமைச்சர் மறைந்த எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டி யில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம் கட்டப்படும என்று அறிவித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களிடம் கி.ராஜநாராயணன் அவர்களின் மணிமண்டபம் பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்று முறை யிட்டார். அவ்வாறு பழமை மாறாமல் கட்டுவ தற்கு கூடுதலாக ரூ.91 லட்சம் தேவைப் படுகிறது. முதலில் எழுத்தாளர் கி.ரா. அவர்களுக்கு கல் சிலை அமைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது வெண்கல சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வரு கிறது. நூலக அறை, கண்காட்சி அறை ஆகி யவை அமைய இருக்கிறது. இப்பணிகளை இன்னும் 4 மாத காலத்தில் முடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். தமிழகத்தில் சுங்கச்சாவடி குறைக் கப்பட வேண்டும், மாநகராட்சி, நகராட்சியில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் சுங்கசாவடி இருக்க கூடாது என்று விதிமுறை இருக்கும் போது சென்னையில் 5 சுங்க சாவடிகள் இந்த விதிமுறையை மீறி செயல் படுவதால் அதனை அகற்ற வேண்டும் என்று சட்டமன்றத்திலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் கொ டுத்தும் பேசினேன். இதையெடுத்து 60 கிலோ மீட்டருக்கு இடையே உள்ள சுங்க சாவடியை எடுக்க போவதாக தெரி வித்துள்ளார். தமிழகத்தில் தேசிய நெடுஞ் சாலையில் விதிகளுக்கு அப்பாற்பட்டு சுங்கசாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்த உடன் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி சுங்கசாவ டியை அகற்ற தமிழக அரசு முழு வீச்சு வுடன் பாடுபடும் என்றார்.