இராமநாதபுரம், ஜூன் 10- இராமநாதபுரம் நகர மக்களுக்கு அடிப்படை வச திகளை நகராட்சி நிர்வாகம் செய்துகொடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக ஜூன் 14ஆம் தேதி காத்திருக் கும் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் கோரிக் கைகள் தொடர்பாக நகர் மன்ற தலைவர் மற்றும் நக ராட்சி நிர்வாகம் கட்சித்தலை வர்களை பேச்சுவார்த் தைக்கு அழைத்தது. இதைத் தொடர்ந்து நகர்மன்ற தலை வர் ஆர்.கே. கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர் வீன் மற்றும் பொறியாளர் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரை, தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் என்.வெங்கடேஷ் மற்றும் எஸ்.பி. பூமிநாதன், மணிக் கண்ணு ஆகியோர் சந் தித்துப்பேசினர். நகர் மன்ற தலைவர் மற்றும் ஆணையரி டம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. நகரில், தினந் தோறும் காவிரி கூட்டுக்குடி நீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அரண் மனை ஹைமாஸ் விளக்கு கள் உள்பட நகர் தெரு விளக்குகள் அனைத்தும் எரி வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பாதாள சாக் கடை கழிவுநீர் அகற்றவும் சாக்கடைகளுக்கு மூடி போட வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் தினந் தோறும் குப்பைகளை சேக ரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதி கள் குறித்து சிபிஎம் தலை வர்கள் நகர்மன்ற தலை வர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் வலியு றுத்திப் பேசினர் . விரைவில் நடவடிக்கை எடுத்து அடிப் படை வசதிகளை செய்து தரு வதாக நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையர் சிபிஎம் தலைவர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக சிபிஎம் தாலுகாச் செயலாளர் செல் வராஜ் தெரிவித்தார்.