districts

img

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் : உறுதி மொழி ஏற்பு

தூத்துக்குடி,பிப். 9 தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப். 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட குற்ற பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயராம், நிர்வாக அதிகாரிகள் சிவஞானமூர்த்தி, ஆறுமுகம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மயில்குமார், கணேசபெருமாள், மாரியப்பன், நம்பிராஜன், அருணாசலம், காவேரி, சரஸ்வதி உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.