திருச்சிராப்பள்ளி, செப்.26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட அபிஷேகபுரம் பகு திக் குழுவின் 23-வது மாநாடு கடந்த செப்.12 அன்று அழகப் பன் நினைவரங்கத்தில் நடந் தது. மாநாட்டிற்கு கணேசன், கலைவாணி, சதாசிவம் ஆகி யோர் தலைமை வகித்தனர். மாநாட்டை மாநகர் மாவட் டச் செயலாளர் ராஜா துவக்கி வைத்தார். கோரையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அபிஷேகபுரம் பகுதிகுழு செயலாளராக ஏ. வேலுச்சாமி தேர்வு செய்யப் பட்டார். முடிவில் ஒன்றியக் குழு உறுப்பினர் சிவா நன்றி கூறினார்.