districts

img

கனமழையால் மதுரையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதி

மதுரை, நவ.4-  மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதி களில் வியாழனன்று  நள்ளிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் மதுரை நகர் பகுதிக ளில் முக்கிய சாலைகள், தெருச் சாலைக ளில் மழைநீர் தேங்கியது. வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு மிகவும் சிரமப் பட்டனர்.   வடகரை, தென்கரை பகுதிகளில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் யானைக்கல் தரைப்பாலத்தில்  தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடிய வில்லை. இதனால் ஏ.வி. மேம்பாலம், கோரிப்பாளையம் பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. எல்லீஸ் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிமெண்ட் குடிநீர் தொட்டி திடீரென இடிந்து கீழே விழுந்தது. அங்கிருந்த  சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியும் கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை,  சேதமடைந்து,சுகாதாரச் சீர்கேட்டில் குடியிருப்புகள் எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள பல்வேறு  அடுக்குமாடி குடியிருப்புகள் , அரசு குடியிருப்புகளும் பெரும் சேதமடைந் துள்ளன. மேலவாசல் பகுதியில் உள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்புகளும் மழைக்காலத்தில் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கியுள்ளது.    செல்லூர்-குலமங்கலம் இணைப்பு முக்கிய சாலையில் வைகை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக  ஆங்காங் கே மெகா பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலையை மறித்து பல்வேறு ஆக்கிர மிப்புகள் உள்ளன.  இச்சாலையில் வாக னங்கள் கடந்து செல்லும் போது விபத்து கள் நிகழ்கின்றன. பள்ளி கல்லூரி வாகனங்களும் சிக்கித்தவிக்கின்றன.   பாதாளச் சாக்கடை மூடி உடைந்துள் ளதால் அதில் விழுந்து பலர் காயமடை கின்றனர்.  உடனடியாக சாலையை சீர மைக்க வேண்டும் என்று மக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.