districts

img

எழுத்தறிவு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

இராமநாதபுரம், ஜூலை 23- இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது  வந்தோர் கல்வியியக்கத்தின் சார்பில் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன் னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனை தொடக்க விழா கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் சி. அமுத வல்லி வரவேற்றுப் பேசினார். இயக்குனர் பெ.குப்பு சாமி திட்ட விளக்க உரையாற்றினார்.அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ரஜ கண்ணப்பன் வழங்கிப் பேசினார். இராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் புதிய பள்ளிகள், கல்லூரிகள் தமி ழக அரசால் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்  தின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ரூ. 587 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிப்பிட்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், முழு முயற்சி யின் காரணமாக 3.19 லட்சம் பேருக்கு எழுத படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் இந்த ஆண்டு 4.80 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ண யித்துள்ளார்.இதை மிஞ்சும் வகையில் அதிகமான பேருக்கு எழுத படிக்க கற்றுக் கொடுப்போம். இந்தியா  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் 25 சதம்  பேருக்கு தன்னுடைய பெயரை எழுதத் தெரிய வில்லை என குறிப்பிட்டார். கேரளாவில் வயது வந்தோருக்கான கல்வி இயக்கத்தில் 96 வயது கார்த்தியாயினி கல்வி கற்று 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்று கூறினார். விழாவில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உ.திசை வீரன், திருப்புல்லாணி ஒன்றியக் குழு தலைவர் சா.புல்லாணி, மாயாகுளம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன், முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் அ. பாலு முத்து நன்றி கூறினார்.