திண்டுக்கல், நவ.30- திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருந்து மாத்திரை மட்டும் தரும் ஒரு கிளினிக் போல செயல்படுகிறது. அது பற்றிய விவரம் வருமாறு. திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு, வத்தலகுண்டு, நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர், பட்டி வீரன்பட்டி, ஆத்தூர் ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திண்டுக்கல், பழனி துணை சுகாதார இயக்குநர்கள் கட்டுப்பாட்டில் அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், மற்றும் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார நிலை யங்கள், செயல்பட்டு வருகின்றன.
கோமாவில் கிடக்கும் தலைக்காயப்பிரிவு
திண்டுக்கல் மக்களின் நீண்ட கால போராட் டத்திற்கு பிறகு தலைக்காயப்பிரிவு துவங்கப் பட்டது. விபத்து காலத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் உயிருக்கு போராடுபவர்கள் மதுரையில் உள்ள பெரிய தனியார் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைபெற ஆம்புலன் சில் செல்லும் வழியிலேயே இறந்துவிடுவார் கள். இந்த இறப்புகளை தடுப்பதற்காக பல தனியார் மருத்துவமனைகளும் அரசும் இணைந்து திண்டுக்கல் மதுரை சாலையில் பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப் பட்டு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை உட னடியாக எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த திட்டம் ஏனோ கைவிடப்பட்டது. தலைக்காய பிரிவு துவங்கப் பட்ட நாள் முதலே அந்த பிரிவு இயங்கவில்லை. அந்த பிரிவில் போதிய சிறப்பு மருத்துவர்கள், உயர் தொழில் நுட்ப கருவிகள் இல்லை. போதிய ஊழியர்கள் இல்லா நிலை நீடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை யில் தலைக்காய பிரிவு துவங்க வேண்டும். உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்று பலகட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பலனா கவே தலைக்காய பிரிவு துவங்கப்பட்டது. இப்போது கோமா நிலையில்தான் இந்த பிரிவு உள்ளது. இந்த பிரிவில் 23 பேர் பணியாற்றுகிறார் கள். 2011ல் மாவட்ட ஆட்சியரால் பணி நிய மனம் செய்யப்பட்ட இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவசர சிகிச்சை பிரி வான தாய் பிரிவில் நிரந்தரமான மருத்துவர்கள் இல்லை. பச்சிளம் குழந்தை பிரிவில் கூட நிரந்தரமான டாக்டர்களோ, நர்ஸ்களோ கிடை யாது. தற்காலிக ஊழியர்கள் தான். தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் தான் . விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பகுதி, தலைக்காயப் பிரிவு, ஆர்த்தோ பிரிவு களில் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல் படுத்தப்படவில்லை. மேற்காணும் பிரிவுகளில் உதவி மருத்துவர்களை நியமனம் செய்வதை தவிர்த்து சிறப்பு மருத்துவர்களை பணி நிய மனம் செய்யவில்லை. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட இதே நிலை நீடிப்பது தான் அவ லம்.
ஆய்வக பரிசோதனைக்கூடம்
இது விபத்து சமயத்தில் மிகவும் துரிதமாக செயல்பட வேண்டிய துறை. ஆய்வக பரிசோத னைக் கூடத்தில் 40 பேர் பணியாற்ற வேண் டிய இடத்தில் 4 பேர்தான் பணியாற்றுகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் 4 பேர் பணியாற்று கிறார்கள். இதனால் மக்கள் அதிகமாக சிர மத்திற்குள்ளாகிறார்கள். பணிபுரியும் பணியா ளர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழல் உள்ளது.
மருந்து வழங்குமிடம்
மருந்து வழங்குமிடம், அறுவை சிகிச்சைக் கிடங்கு. மருத்துவக்கிடங்கு. ஆகியவற்றில் 1980க்கு முந்தைய பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையாக இருக்கும் போது 350 படுக்கைகள் இருந்தது. அப்போது 16 மருந்தாளுநர்கள் பணியாற்றினர். தற் போது அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 900 படுக்கைகளுடன் இம்மருத்துவமனை செயல் படுத்தப்பட்டு வருகிறது. அன்றைக்கு 500 பேர்வரை இந்த மருத்துவமனைக்கு புற நோயா ளிகள் வந்த நிலையில் தற்போது 3000 பேர் வரை புற நோயாளிகள் வருகிறார்கள். ஆனால் அதே 16 மருந்தாளுநர்களைக் கொண்டு தான் இப்போதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் காலையில் புறநோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று மாத்திரை மருந்துகளை பெற வேண்டிய சூழல் உள்ளது.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன்.
இம்மருத்துவமனையில் மேற்கண்ட ஸ்கேன்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சி.டி.ஸ்கேன் 24 மணி நேரமும் எடுக்கப்படு கிறது. ஆனால் இன்று ஸ்கேன் எடுத்தால் மறு நாள் தான் மருத்துவ அறிக்கை அளிக்கப்படு கிறது. போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப் படாத காரணத்தால் தாமதமாக ரிப்போர்ட் கொடுக்கப்படுகிறது. உயிருக்கு போராடுகிற நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட முடியாத நிலை உள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இரவு நேரங்களில் எடுப்பதில்லை. இதனால் நோயாளிகள் தனி யார் ஸ்கேன் சென்டர்களுக்கு சென்று அதிக பணம் செலுத்தி ஸ்கேன் எடுக்க வேண்டியுள் ளது. வயிற்று வலி, கர்ப்பிணி பெண்கள், சிறு நீரக கோளாறு உள்ள நோயாளிகளுக்கு அல்ட்ரா ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த மையத்தில் பதிவு செய்து வைத்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து தான் ஸ்கேன் எடுக்கப்படும் அவல நிலை உள்ளது. பிற்பகல் மற்றும் இரவில் வரும் அவசர நோயாளிகளுக்கு எடுப்ப தில்லை.
பல்நோக்கு மருத்துவம்
காயமடைந்து வரும் நோயாளிகளுக்கு கட்டுகட்டுவது, மருந்து போடுவது, போன்ற சிகிச்சைகளை பல நேரங்களில் புற ஆதார முறையில் பணிபுரியும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இதனால் பல நேரங்களில் நோயாளிகளுக்கு புண் புரையோடி நோயா ளிக்கு ஆபத்தாகிறது.
நுண் கதிர் பகுதி
இப்பிரிவிற்கு தினமும் நூற்றுக்கும் மேற் பட்டவர்களுக்கு படம் எடுக்கப்படுகிறது. ஆனால் இப்பிரிவில் ஒரு நிரந்தரமான பணியாளர் கூட இல்லை. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆய்வக நுட்பனர்கள், நுண் கதிர் வீச்சாளர்கள், செவிலிய உதவியாளர்கள் பல்நோக்கு பணியாளர்கள் என அனைவரும் காலமுறை ஊதியமின்றி தொகுப்பூதியம் பெற்று வருகிறார்கள். வேடசந்தூர், நத்தம், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், ஆகிய அரசு மருத்துவமனைகள் 4 வழிச்சாலைகளின் மிக அருகில் உள்ளதால் இந்த மருத்துவமனை களில் சி.டி.ஸ்கேன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்றால் குழந்தை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், கண் மருத்துவம், ஓட்டோலரிஞ்ஜாலஜி, மன நல மருத்துவம், மார்பு மருத்துவம், தோல் மருத்து வம், உள்ளிட்ட அடிப்படை துறைகள் செயல் படுத்தப்பட வேண்டும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளில் நரம்பி யல், இருதயவியல், சிறுநீரகம், குழந்தை அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, தீப்புண்ணிற்கான தீவிர சிகிச்சை பிரிவு, விஷமுறிவு பிரிவு சிறுநீரகம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை, உணவு மண்டல அறுவை சிகிச்சை, இனப்பெருக்க அறுவை சிகிச்சை நடைபெற வேண்டும். தானியங்கி பகுப்பாய்வு, கதிரியக்கவியல் துறை, பொது அறுவை சிகிச்சை, அனஸ்தீசியா, டி.வி.எல், நோயியல், உடலியல், மருந்தியல். நுண்ணு யிரியல், மனநல மருத்துவம், செயல்பட வேண்டும். குறிப்பாக இருதயவில் தொடர்பாக வும், புற்று நோயியல் தொடர்பாக அனைத்து கருவிகளும், சிறப்பு மருத்துவர்களும். நிய மிக்கப்பட வேண்டும். சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அப்படி எதுவும் இல்லை.
சிபிஎம் இன்று ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தமிழ்நாடு மருத்து வத்துறை, திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்த அனைத்து வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி டிசம்பர் 1 ( இன்று) ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. -இலமு