மதுரை, ஜன.28 - பொதுச் சொத்துக்களை கார்ப்ப ரேட் முதலைகளுக்கு விற்றுக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசு மதுரையில் பொதுமக்கள் பயன் படுத்தும் இரயில்வே மைதானத்தை யும் விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளது. இதற்கு எதிராக மதுரை மக்கள் திரண்டெழுந்துள்ளனர்.
அதன் ஒரு வடிவமாக மதுரைக்காக மாரத்தான் நடைபெற்றுள்ளது. மதுரை அரசரடி ரயில்வே விளை யாட்டு மைதானம் மற்றும் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு சார்பில் ‘‘மாரத்தான் அல்ல; மதுரைக் காகத்தான்’’ என்ற முழக்கத்துடன் ரயில்வே நிலம் மற்றும் மைதானத்தை பாதுகாக்கும் விதமாக அரசரடி யூ.சி. பள்ளி மைதானத்திலிருந்து மாரத்தான் ஓட்டம் துவங்கியது. மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு செயலாளர் பி.பால்ச் சாமி தலைமையில் ஞாயிறன்று நடை பெற்ற விழிப்புணர்வு மாரத்தானை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் அரசரடி மெயின் ரோடு வழியாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலைய சந்திப்பு, சேதுபதி பள்ளி சாலை, மதுரை கோட்ஸ் மேம்பாலம், கரிமேடு, புது ஜெயில் ரோடு சாலை, அரசரடி வழி யாக ரயில்வே விளையாட்டு மைதா னத்தில் நிறைவடைந்தது.
தொடர்ந்து யூ.சி. பள்ளி மைதானத் தில் நடைபெற்ற பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தடகள சங்கத் தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலை எம்.ராஜா, அப்பல் லோ மருத்துவமனை செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி ராஜேஷ், மதுரை ரயில்வே நில பாதுகாப்பு குழு பொருளாளர் ஆர்.சுடலைமுத்து, உப தலைவர் எஸ்.ராஜாராம் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனச் செல்வம், மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை.ஜென்னியம்மாள் ஆகியோர் மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழை வழங்கினர்.
மதுரை ரயில்வே நில பாது காப்புக் குழு நிர்வாகிகள் இரா. லெனின், சுப்புராம், டி.ராஜேந்திரன், ஏ.பாண்டி, சரவணக்குமார், முத்து பாண்டி, கு.கணேசன், பி.ஜீவா, க.பாலா, சிலம்பப் பள்ளி ஆசிரியர் வடி வேல், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதிராஜா, காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டத் தலைவர் நா.சுரேஷ்குமார், அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராமசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் தெய்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.