districts

img

544 மதிப்பெண்கள் எடுத்த அரசுப்பள்ளி மாணவர்

சின்னாளபட்டி, மே 9- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்  கானலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியரும் இதே பள்ளியில் பயின்றவருமான  மரியதாஸ் மற்றும் ஆசிரியர்கள் ஆகி யோரின் தீவிர முயற்சிகளின் காரண மாக பிளஸ்-2 தேர்வை எழுதிய  45  மாணவர்கள்,7 மாணவிகள் என 52  பேரும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த  பள்ளியில் படித்த வில்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற மாணவர் 544  மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாணவ, மாணவி யர்களுக்கு பெற்றோர்களும் தலைமை ஆசிரியர், ஆசிரி யர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.