விருதுநகர், அக்.11- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் புறநோயாளி கள் சீட்டுகளை பதிவு செய்ய நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச் சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சிகிச்சை பெற வரும் புற நோயாளிகள் மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் வரிசையில் நின்று தங்க ளது பெயர் மற்றும் வயதை குறிப்பிட்டு புதிய சீட்டு ஒன்று வாங்க வேண்டும். பின்னர் அருகில் உள்ள ஓர் பகு திக்குச் சென்று அங்கு வரிசையில் நின்று அங்குள்ள ஊழியர்களிடம் அச்சீட்டை வழங்க வேண்டும். அவர்கள், அதை ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்து விட்டு, நோயின் தன்மைக்கு ஏற்ப எங்கு போய் சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கின்றனர். அவ்வாறு பதிவு செய்யும் இடத்தில் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக, வயதான நோயாளிகள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருக் கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அப் போது, சிலர் வரிசையில் நிற்காமல் குறுக்கே சென்று சீட்டுகளை பதிவு செய்ய முயல்கின்றனர். அப்போது அவர்களுக் கும் ஏற்கனவே காத்து நிற்கும் நோயாளி களுக்கும் இடையே சண்டை ஏற்படும் நிலை உருவாகிறது. அதேவேளை, சீட்டுகளை பதிவு செய்யும் இடத்தில் காலதாமதம் ஏற்படு வதால் பணியில் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்காக காத்திருக்கும் நிலை யும் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமானது, விருது நகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், சிகிச்சை பெற வரும் புற நோயா ளிகள் தங்களது பெயர் மற்றும் வயதை பதிவு செய்யும் இடத்திலேயே சிகிச்சை பெற வேண்டிய இடத்தையும் தெரிவிக்கும் நடை முறையை விரைவில் செயல்படுத்திட நட வடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.