தேனி, மார்ச் 19- மதுரை அருகே 100 ஆண்டுகள் பழமை யான பாண்டியர் கால வட்டெழுத்து கற்செக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழக நிறுவனர் பாவெல்பாரதி, பேராசிரியர் அழ கர்சாமி, காந்திராஜன், அருண் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பெரியகட்டளை கிராமம் மேட்டுக்காடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து செக்குக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. 32 அங்குலம் வெளிவிட்டமும், 23 அங்குலம் உள் விட்டமும் 14 அங்குலம் ஆழமும் கொண்ட இச்செக்கு உரலின் வட்டமான மேல் விளிம்பில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் அறிஞர்கள் சொ.சாந்தலிங்கம், சு.இராஜ கோபால் ஆகியோரின் துணையோடு இக்கல்வெட்டு வாசித்தறியப்பட்டது. அதில் ஸ்ரீ குடிகம் நல்லூரார் இடுவிச்ச கற் செக்கு பட்டசாலியன் உ என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ குடிகம் நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்த ஊர் அவையினரால் (ஊரார்) இக்கற்செக்கு அமைக்கப்பட்டுள்ளதும் அதில் பட்ட சாலியன் என்ற பெயரும் இடம் பெற்றுள்ளதையும் அறிய முடிகிறது. அப்பெயர் கற்தச்சரின் பெயராகவோ ஊர் அவையைச் சார்ந்தவரின் பெயராகவோ இருக்கலாம். முற்காலப் பாண்டியர் காலத்தில் கோயில் களுக்கு நிலதானம் வழங்கப்பட்ட தேவதான கிராமங்களும், பிரமாணர்களுக்கு நில தானம் வழங்கப்பட்ட பிரம்மதேயக் கிராமங்களும் நல்லூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இப்பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த உடைந்த பானை ஓடுகள், உடைந்த செங்கல், சிறிய அளவிலான அம்மி, உரலின் சிதைந்த பகுதிகள், இரும்புக் கசடுகள் காணப்படு கின்றன. இப்பகுதியில் அக்ராகாரங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த வட்டெழுத்துக் கல்வெட்டு மூலம் ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் இங்குள்ள பெருமாள் கோவிலுக்குத் தேவ தானமாக வழங்கப்பட்ட இப்பகுதி குடிகம் நல்லூர் என அழைக்கப்பட்டதாகக் கருத லாம். எனவே பெரியகட்டளை என்ற ஊர் பாண்டியர் காலத்தில் ஸ்ரீ குடிகம் நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ள புதிய செய்தி வெளிப்பட்டுள்ளது.
மேலும் வழக்கமாகக் கல் செக்குகள் உரல் போன்ற வடிவிலேயே அமைந்திருக்கும். ஆனால் இங்கு தொட்டி போன்ற வடிவில் கிடைத்திருப்பதும், அதில் எண்ணெய் வெளியேற துவாரம் அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இடைக்காலத் தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்களை ஆட்ட ஊருக்குப் பொதுவாக கல்செக்கு செய்து தருவது அறச்செயலாகக் கருதப்பட்டுள்ளது. ஊரார் (ஊர்ச்சபை), குறுநிலத் தலை வர்கள், ஊர்த்தலைவர்கள், உடைமை யாளர்கள் ஆகியோர் இது போன்ற கல்செக்கை உருவாக்கித் தானமாக கொடுத்துள்ளனர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரிலும் இத்தகைய செக்குகள் தானமாகத் தரப்பட்டுள்ளன. ஊர் மக்கள் நிலக்கடலை, எள், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணெய் எடுத்துப் பயன்படுத்துவர். இப்படித் தானமாகத் தரும்போது அதைச் செய்து கொடுத்தவர் நாடு, ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாக அந்தக் கல்செக்கில் பொறிக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஆனால் இச்செக்கினை ஊர் அவையினர் அமைத்துக்கொடுத்துள்ளனர். முற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த இக்கல்செக்கில் பழமையான குடி கம் நல்லூர் என்ற ஊரின் பெயர் இடம்பெற்றி ருப்பதும், செக்கின் உருவம் தொட்டி வடிவில் அமைந்திருப்பதும், வட்டெழுத்து வரிவடிவம் அழகிய கையெழுத்துடனும் அமைந்திருப்ப தும், முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் பாவெல்பாரதி தெரிவித்துள்ளார்.