விருதுநகர், ஏப்.8- விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்டது சிவஞான புரம் ஊராட்சி. இங்கு, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் திருநங்கைகளுக்காக 6 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டன. இக்குடியிருப்புகளை வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் திலகவதி, சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், செயற் பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் சிவகாமி, வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.