மதுரை, ஜூலை 19- மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் புதனன்று காலை மாதாந்திர உண்டியல் திறப்பு கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோயில் செயல் அலுவலர் சுரேஷ். கோவில் தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பா ளர்கள் சேகர் மற்றும் பிரதீபா முன்னிலையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திறக்கப்பட்ட உண்டியல்களை, திருக்கோவில் கண்காணிப்பாளர் பிரதீபா மேற்பார்வை யில், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் எண்ணும் பணி யில் ஈடுபட்ட நிலையில், பக்தர்களிடம் இருந்து ரூபாய் 50 லட்சத்து 37 ஆயிரத்து 63. மற்றும் 35 கிராம் தங்கம், 212 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக கிடைக் கப்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து பக்தர்களிடம் இருந்து உண்டியல் மூலம் கிடைக்கப்பெற்ற காணிக்கைகளை கோவில் நிர்வாக பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டது.