districts

img

வெற்றிக்கான 5 திறமைகள் புத்தக வெளியீட்டு விழா

தூத்துக்குடி,அக்.25 தூத்துக்குடியில் இளம் எழுத்தாளரும்  ஆ.சந்துரு வேல்முருகன் எழுதியுள்ள “வெற்றிக்கான 5 திறமை கள்” என்னும் புத்தக வெளி யீட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரலிங்கம் புத்தகத்தை வெளியிட ஆடிட்டர் வானுமா மலை பெற்று கொண்டார்.  விழாவில் பேசிய புத்தக ஆசிரியர் ஆ.சந்துரு வேல்முருகன் கூறுகையில், நான் எனது முதல் புத்த கத்தை இன்று உங்கள் அனை வர் மத்தியில் வெளியிட்டுள் ளேன். இந்த புத்தகம் ஒரு மனிதன் வெற்றிபெற தேவை யான அடிப்படை திறமைகள் எவை என விளக்கம் அளிக்க கூடிய  அனுபவ ரீதியான புத்தகமாக இருக்கும் என்றார். இவ்விழாவில் கிருஷ்ணமூர்த்தி, முரு கேசன், ராஜசேகர் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

;