சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீகலைவாணி வித்யாலாயா மெட்ரிக் பள்ளியில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில் துவக்கி வைத்தார்.நகர்மன்றத் தலைவர்முத்துத்துரை, துணைத் தலைவர் குணசேகரன், ஸ்ரீகலைவாணி வித்யாலாயா மெட்ரிக் தாளாளர் க.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.