districts

img

தியாகி லீலாவதி 26 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

மதுரை, ஏப்.23-  தியாகி லீலாவதியின் 26 ஆம்  ஆண்டு நினைவுதினத்தை முன்  னிட்டு ஏப்ரல் 23 அன்று பல்வேறு  பகுதிகளில் அவரது உருவப்படத் திற்கு மாலையணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் மாதர் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினருமான தோழர் லீலா வதி 1996 ஆம் ஆண்டில் சமூக விரோதிகளால் வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மாதர் சங்கம் மற்றும் கட்சியின் சார்பில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் தெற்கு பகு திக்குழு சார்பில் வில்லாபுரத்தில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு பகுதிக்குழுச் செய லாளர் ஜெ.லெனின் தலைமை வகித்தார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாந கர் மாவட்ட செயலாளர் மா.கணே சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ரமேஷ், சிஐடியு மாவட்ட பொருளாளர் லூர்துரூபி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பி. சாந்தி ஆகியோர் பேசினர். கே. கண்ணன் நன்றி கூறினார்.  மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பிலும் அனுசரிக்கப்பட்டது போக்குவரத்து

இடைக்கமிட்டி சார்பில் அரசு விரைவு போக்கு வரத்து கழகம், எல்லீஸ் நகர்,  புதூர், எம்சிபி, அரசு போக்குவரத்து தலைமையகம் ஆகிய இடங்க ளில் தோழர் லீலாவதி உருவப்படத்  திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அனைத்து பகுதிக்குழுக்கள் சார்பிலும் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. தேனி  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தில் லீலாவதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது . நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்  தலைவர் எஸ். வெண்மணி, தாலுகா செயலாளர். கே. கோமதி, மாவட் டக் குழு உறுப்பினர் சி. சுஜாதா மற்றும் பலர் பங்கேற்றனர்.