அமைச்சர் கே.என்.நேரு தகவல் திண்டுக்கல், மே 28- தமிழ்நாடு முழுவதும் ரூ.24 ஆயிரம் கோடிக்கு குடிநீர் திட்டங்களை செயல் படுத்தி உள்ளோம் என்று நகராட்சி நிர்வா கம் - குடிநீர் வடிகால் வாரிய அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திண்டுக்கல் எம்.வி.எம். நகரில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று ரூ.133 கோடியில் குடிநீர் அபி விருத்தி திட்டத்தை துவக்கி வைத்து அவர் இவ்வாறு பேசினார். அமைச்சர் மேலும் கூறுகையில், நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வடிகால் வாரிய துறையில் செயலாளர்கள் திட்டங்களை செயல்படுத்து வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்த துறையில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து விட முடியும். நேரடியாக உங்கள் தகுதிக் கேற்ப அந்த பணி உங்கள் வீடு தேடி வந்து சேரும். அது ஒரு காலத்தில் நிச்சயம் நடந்து முடியும். 128 ஊராட்சிகளில், 20 பேரூராட்சி களில் இந்த குடிநீர் திட்டப்பணிகள் செயல் படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் குடி நீருக்கு நம்முடைய முதல்வர் நமக்கு வழங்கி யிருக்கிற தொகை ரூ.24 ஆயிரம் கோடி ஆகும். அது போல வளர்ச்சித் திட்டங்களாக வும் வழங்கியுள்ளார். இதில் திண்டுக்கல்லில் விடுபட்ட பாதாளச்சாக்கடை திட்டத்தை அமல்படுத்த ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டு நிதி வந்திருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு முதல்வர் அனுமதி தந்துள்ளார். தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவு செய்து கொண்டு வருகிறோம். தொகுதியில் உள்ள கோரிக்கை களை நிறைவேற்றுவது எங்களுடைய கடமை. அதை நிச்சயமாக செய்து தரு வோம் என்று அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் பூங்கொடி வர வேற்றார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பி னர் காந்திராஜன், பழனி சட்டமன்ற உறுப்பி னர் ஐ.பி.செந்தில்குமார், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா தலைமை வகித்தார். மேலா ண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி இயக்குநர் பொன்னையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.