districts

img

முதல்வரிடம் சு.வெங்கடேசன் எம்.பி., சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் நேரில் மனு அளிப்பு

சென்னை, ஜன.19-  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினி டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், மதுரையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 23 கோரிக் கைகள் அடங்கிய மனுவினை தலை மைச் செயலகத்தில் நேரில் சந்தித்து ஜனவரி 19 புதன்கிழமையன்று வழங்கி னார் . அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்த னர். முதல்வரிடம் வழங்கிய கோரிக் கைகளின் சுருக்கம் வருமாறு: மதுரை மாவட்டத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். மேலூர் பகுதி தொழிற்பேட் டைக்கு முன்னுரிமை அளிக்க வேண் டும். மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 சதவிகித இடங்களை வகைப்படுத்த வேண்டும். மதுரை - தூத்துக்குடி  தொழில் பெருவழித் திட்டத்தை சிறப்பு டன் செயல்படுத்த தனி ஐஏஎஸ் அதி காரியை நியமிக்க வேண்டும். மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப பூங்காவினை உருவாக்க வேண்டும்.

ஜவுளிக்கென தனி வாரச் சந்தை அமைத்திடுக!

மதுரையில் ஜவுளி தொழிலை மேம்படுத்த ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும். சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்பு சந்தையினை ஏற்படுத்த வேண்டும். உயிரியல் துறையில் சிறு - குறு தொழில்களை ஊக்குவிக்க காம ராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும். மதுரையின் மையத்தின் இருக்கும் மத்திய சிறைச்சாலையினை உடனடி யாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும்.  சிந்து முதல் வைகை வரை செழித் தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத்தரத்திலான அருங்காட்சிய கத்தினை தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக் கப்பட வேண்டும். 

வடக்கு நதிக்கரை சாலையை விரிவுபடுத்துக! 

பாத்திமா கல்லூரி முதல் கன்னியா குமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலை யை விரிவுபடுத்த வேண்டும். காளவாசலில் இருந்து கன்னியா குமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.  விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, மேலமடை, அரசு இராஜாஜி மருத்துவமனை, மாட்டுத் தாவணி, தெற்குவாசல், கோரிப் பாளையம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண் டும். பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தை சீரமைக்க வேண்டும். பழங்காநத்தம் வ.உ.சி. பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும். மதுரை மாவட்ட விரைவு போக்கு வரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோ விற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும். வைகை நதியினை பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடு களை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மதுரை மாநகராட்சியின் விரி வாக்கப்பட்ட வார்டுகளில் பாதாளச் சாக்கடை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். வைகை உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும் கழிவுநீரை உட னடியாகத் தடுக்க வேண்டும். 

ஜல்லிக்கட்டுக்காக  அதிநவீன கலை அரங்கம் 

மதுரை மாநகரின் சாலைகளை சீரமைக்க உடனடியாக ரூ.150 கோடி ஒதுக்கப்பட வேண்டும். அலங்காநல் லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக் கான அதிநவீன கலை அரங்கம் உரு வாக்கப்பட வேண்டும். உலகத் தமிழ்ச் சங்கத்தினை சீர மைத்து அனைத்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மதுரையில் புதிய அரசு கலை அறி வியல் கல்லூரியினை உருவாக்க வேண்டும். கொட்டாம்பட்டியில் புதிய அரசு ஐடிஐ உருவாக்க வேண்டும். மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியினை அரசுக் கல்லூரியாக மாற்றிட வேண்டும். மதுரை விமான நிலைய விரி வாக்க சுரங்கப்பாதை, மதுரை நக ரத்தின் புதிய உள்வட்டச்சாலை, வெளி வட்டச்சாலை உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உட னடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும். அலங்காநல்லூர் தேசிய சர்க் கரை ஆலையை இயக்கிடவும், அதற் கான பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கிடவும் வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக சாத்தையாறு அணையில் பெரியார் பிரதான கால்வாய் மூலம் நீரை தேக்கு வதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை துவக்க வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாத்திடுக!

மேலூர் அரசு மாவட்ட மருத்துவ மனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடம் கட்ட 50 கோடி ரூபாய் ஒதுக்கிட வேண் டும். மதுரையின் பசுமைப் போர்வை யை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து, ஏற்கெனவே உள்ள காடுகளை பாது காக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள எல்லா நீர் நிலைகளையும் அதன் முழுக்கொள்ள ளவிற்கு தூர்வாரிட வேண்டும். வைகையின் பிறப்பிடமான மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். மதுரையின் சுற்றுச்சூழலை மீட்டு ருவாக்கம் செய்து காற்று மாசுபடு தலை குறைத்திட நடவடிக்கை எடுத் திட வேண்டும். மதுரை எய்ம்ஸ் , மதுரை நைபர், மதுரை சர்வதேச விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.