districts

img

வீரபாண்டிய கட்டபொம்மன் 222 ஆம் ஆண்டு நினைவு நாள் வைகோ மரியாதை

தூத்துக்குடி, அக்.16- வீரபாண்டிய கட்டபொம்ம னின் 222-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கயத்தாறில் கட்ட பொம்மன் மணி மண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தி னார். வீரபாண்டிய கட்டபொம்ம னின் 222-ஆம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமையன்று அனு சரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள வீர பாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்தில் உள்ள வீரபாண் டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார். அவருடன் அவரது மகன் துரை வைகோ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சதன் திருமலைக் குமார், ரகுராமன், வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், இளைஞர் அணி மாவட்ட செயலர் விநாயகா ஜி.ரமேஷ் உட்பட மதிமுக நிர்வாகிகள் திர ளானோர் உடனிருந்தனர். கயத்தாறிலுள்ள கட்டப் பொம்மன் மணிமண்டபத்தி லுள்ள கட்டப்பொம்மன் சிலை க்கு அரசு சார்பில் கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் சங்கர நாராயணன் மாலை அணி வித்து மரியாதை செய்தார். நிகழ்வில் கயத்தாறு வட்டாட்சி யர் பேச்சிமுத்து, வருவாய் ஆய் வாளர் நேசமணி, கயத்தாறு வரு வாய் ஆய்வாளர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவை தலைவர் என்.கே.பெரு மாள் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின் னப்பன், மாநில எம்ஜிஆர் இளை ஞர் அணி துணைச் செயலாளர் சீனி ராஜ் உள்பட திரளானோர் கலந்துகொண்டு கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

;