மதுரை, செப்.17- மின் கட்டண உயர்வால் மதுரை மாவட் டத்தில் சிறு-குறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. மதுரை யில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு-குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் நேரடி யாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுவருகின்றன. இந்தச் சூழலில் சோலார் மின்சா ரத்திற்குக் கட்டணம். பீக்ஹவர்ஸ் நேரங்க ளில் மின்சாரம் உபயோகித்தால் 25 சத வீதம் கூடுதல் கட்டணம், நிலைக் கட்டணம் உயர்வு போன்றவற்றால் சிறு-குறு தொழில் கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது என்கிறார் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் பொன்.குமார். ஞாயிறன்று அவர் நமது செய்தியாளரிடம் கூறியதா வது: அரசு கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. குறு,சிறு தொழில் நிறுவனங்களுக்கு உச்சப் பயன் பாடு நேர மின் கட்டணம் முதலில் இல்லை. சமீபத்தில் தான் அமல்படுத்தப் பட்டது. நிலைக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவ னங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளன. குறிப்பாக, நிலைக்கட்டணம் ரூ.35- லிருந்து 430 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.150 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உச்சபட்ச நேர மின் பயன்பாட்டுக்கு காலை, மாலை (6-10) என தலா நான்கு மணி நேரத்துக்கு 25 சதவீதம் அதிகரித்துள்ள தால் குறு,சிறு தொழில் நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. சாதார ணமாக ஒரு லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கூடுதலாக ரூ.25 ஆயிரம் சேர்த்து 1.25 லட்சம் கட்ட வேண்டி யுள்ளது. அதே போல் குடிசைத் தொழில் செய்ப வர்களுக்கு 3ஏ-1 என்ற அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. (அதாவது 12 கிலோவாட்டிற்குக் குறைவாக மின் கட்டணம் செலுத்துபவர்கள்) தற்போது குடிசைத் தொழில் செய்பவர்களுக்கு 3ஏ-1 அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படுவதில்ல. 3-பி மின் இணைப்பே வழங்கப்படுகிறது. இதில் 500 யூனிட் மின்சாரம் செலவானால் 3ஏ-1 கட்டணத்தை விட ரூ.2,0266 கூடுதலாக செலுத்த வேண்டி யுள்ளது. வருடம் ஒரு முறை மின்சார மற்றும் இதரக் கட்டணங்களை உயர்த்தும் மல்டி இயர் டேரிப் எனப்படும் புதிய கொள்கை மூலம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மேற்கண்ட கட்டணங்களை உயர்த்தப்பட் டுள்ளது. இதை தமிழ்நாடு அரசு உடனடி யாக ரத்து செய்வதுடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மின்சாரம்- இதரக் கட்ட ணங்களை உயர்த்துவதைத் தவிர்க்க வேண்டும். சோலார் (சூரிய ஒளியை) பயன்படுத்து பவர்கள் ஒரு யூனிட்டிற்கு ரூ.1.53 கட்டண மாக செலுத்தவேண்டியுள்ளது. சோலார் மின்சாரத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்றார். மேலும் அவர் கூறுகையில், “எங்க ளது கோரிக்கைகளுக்கு தகுந்த நிவார ணம் கிடைக்காத நிலையில் செப்.25-ஆம் தேதி கதவடைப்பு மற்றும் உண்ணா விரத போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார். நமது நிருபர்