மதுரை, ஜன.19- 1982 ஆம் ஆண்டு சிஐ டியு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று ஒன்று பட்ட தஞ்சை மாவட்டம் மயி லாடுதுறை அருகில் உள்ள திருக்கடையூரில் நடை பெற்ற விவசாயிகள் போராட் டத்தில் அதிமுக அரசின் காவல்துறை தாக்குதலில் பலியான அஞ்சான், நாகூ ரான், ஞானசேகரன், 2011 ஆம் ஆண்டு சமூக விரோதி களால் படுகொலை செய் யப்பட்ட தோழர் ஜெ. நாவ லன் ஆகியோர் நினைவை போற்றும் வகையில் தியாகி கள் தின அஞ்சலி நிகழ்ச்சி ஜனவரி 19 அன்று நடைபெற்றது. மதுரை மாநகர் சிஐடியு, மதுரை மாவட்ட அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெத்தானியா புரம் அண்ணா மெயின் வீதி யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ். சந்தியாகு தலைமை வகித்தார். சிஐ டியு அரசு போக்குவரத்து சம் மேளன துணைத் தலைவர் வீ. பிச்சை, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியம், விவ சாய தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவர் எஸ். பி. இளங்கோவன், மாவட்டச் செயலாளர் வி. உமாமகேஸ் வரன் உட்பட பலர் பங்கேற்ற னர்.
திருமங்கலம்
சிஐடியு மதுரை புறநகர் மாவட்டம் சார்பில் திருமங் கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருமங்கலம் சிஐடியு பொதுத் தொழிலா ளர் சங்கத்தின் தாலுகா செய லாளர் எம்.சித்ரவேல் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்.கிருண் ணன், வி.பிச்சைராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, எஸ்.பி. இளங்கோவன், விவசாய தொழிலாளர்கள் மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வ ரன், மாவட்டப் பொருளாளர் பி.ஆறுமுகம், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஆண்டவர் ஆகியோர் பேசி னர்.
பழனி
பழனியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. சிஐடியு கன்வீனர் கே. பிச்சைமுத்து தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.ராமசாமி சிறப்புரை யாற்றினார்.