தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) 17 வது மாநில மாநாடு ஆகஸ்ட் 12 -14 வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஏற்றப்படவுள்ள கொடிக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மதுரை கிளை சார்பில் திருமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மதுரை கிளை செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மதுரை புறநகர் சிஐடியு செயலாளர் கே.அரவிந்தன் வாழ்த்துரை வழங்கினார்.