districts

கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து 2 பேர் பலி

பெரம்பலூர், ஜூலை 30 - பெரம்பலூர் அருகே கல்பாடி ஊராட்சிக் குட்பட்ட கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் இருவர் பலியாயினர்.  கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான கல்  குவாரி உள்ளது. அதில் அதிமுக பெரம்ப லூர் ஒன்றியச் செயலாளர் செல்வகுமாரும் பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது.  வெள்ளிக்கிழமை அன்று காலை வழக்க மாக பணிகளை செய்து கொண்டிருந்த போது, முருகேசனின் தம்பியும், லாரி உரிமை யாளருமான சுப்ரமணி (40), ரெங்கநாத புரத்தை சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமார் (36)  ஆகிய இருவர் மீதும் பாறைகள் சரிந்து  விழுந்தன. இதில் சுப்ரமணி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். செந்தில்குமார் படு காயம் அடைந்தார்.  அங்கிருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் உயிரி ழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத் திற்கு சென்ற, மருவத்தூர் போலீசார் மற்றும்  விபத்து மீட்பு படையினர் இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக பெரம்ப லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்சியர் வெங்கடபிரியா மற்றும் எஸ்.பி.மணி, ஏடி எஸ்.பி பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று  பார்வையிட்டனர்.

;