பெரம்பலூர், டிச.23- 2023 கல்வியாண்டில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர் கள் ஆன்-லைன் வழியாக விண் ணப்பிக்க டிசம்பர் 26 முதல் ஜன வரி 3, 2023 வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண் டும், விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை விண்ணப் பிக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட் பட்ட தனித்தேர்வர்கள் பெரம்ப லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித தோம்னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியி லும் ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட தனித் தேர்வர்கள் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி யிலும் விண்ணப்பிக்குமாறு பெரம்பலூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் தெரி வித்துள்ளார்.