பெரம்பலூர், ஜன.28- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலந்த குழி, சாத்தனூர், பிலிமிசை, குரும்பாப் பாளையம் மற்றும் அணைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவ லர் நா.அங்கையர்கண்ணி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ண மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரா.அகிலா (இலந்தைக்குழி), முத்துசாமி (பிலிமிசை) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.