districts

கூட்டு தையல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிதியுதவி பெரம்பலூர் ஆட்சியர் தகவல்

பெரம்பலூர், செப்.5 - 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்திருக்க வேண்டும். இதில், ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திடவும், தையல் தொழி லுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிக பட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம்  வழங்கப்படும்.  தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த ரூ.75 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து  ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்த பட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழு விற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னு ரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட  ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர் களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத் தல் வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத் தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனா ளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற் குள் இருக்க வேண்டும்.  இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்படி வத்தை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினரால் தேர்வு செய் யப்பட்டு, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

;