districts

img

சுங்கச்சாவடி பணியாளர்கள் 7-வது நாளாக தொடர் போராட்டம் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க சிபிஎம் கோரிக்கை

பெரம்பலூர், அக்.7 - திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை யில் பெரம்பலூர் மாவட்டம் அருகே திருமாந் துறை சுங்கச்சாவடி, கள்ளக்குறிச்சி அருகே செங் குறிச்சி சுங்கச்சாவடி உள்பட 5 சுங்கச்சாவடி களையும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர், ஒன்றிய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் உறவினர் ஒருவர் வாங்கியுள்ளார். அதில் இருந்தே நிர்வாகத்திற்கும், பணி புரியும் தொழிலாளர்களுக்கும் இடையே  பிரச்சனை துவங்கி விட்டது. தொழிலாளர் களை குறி வைத்து நிர்வாகம் பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக எவ்வித மான முன்னறிவிப்பும் இல்லாமல் இரண்டு சுங்கச்சாவடிகளிலும் தொழிலாளர்கள் சுமார் 56 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்துள்ளது. இத னால் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.  இந்த அறப் போராட்டத்தில் ஈடுபட்டு எள்ள தொழிலாளர்களை சந்தித்து, போக்கு வரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபா கரன் ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் கவ னத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமையில், ஒன்றியச் செயலா ளர் எம்.கருணாநிதி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ரெங்கநாதன், கோகுலகிருஷ்ணன், நகர செயலாளர் சிவானந்தம் மற்றும் மாவட்டக்குழு  உறுப்பினர்கள், திருமாந்துறை சுங்கச்சாவடி யில் நடைபெற்று வரும் போராட்டக் களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.  பின்னர் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரமேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கடந்த 13 ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வந்த 56 தொழிலாளர்களை திடீரென பணி நீக்கம் செய்துள்ளனர். இதனுடைய அலுவலகம் பாண்டிச்சேரியில் அமைந்துள்ளது. பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப் பாளர் ஆகியோர் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் எந்த பயனும் இல்லை.  தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாகி உள்ளது. காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும். மேலும் தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு சென்று தமிழக எம்.பி.க்கள் வாயி லாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி  வழங்கி, அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப் பட வேண்டும் என்றார்.