districts

img

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி: 188 மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு

பெரம்பலூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஜூலை 24 - 44 ஆவது உலக செஸ் ஒலிம்பி யாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு களிலேயே மிகப்பெரிய போட்டி யாக கருதப்படும் இந்த ஒலிம்பி யாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து  கொள்ள உள்ளனர். 188 நாடு களை சேர்ந்த பல்வேறு விளை யாட்டு வீரர்கள் கலந்து கொள்ள  உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்க ளுக்கு தெரியும் வண்ணம் செஸ்  ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த  விழிப்புணர்வு பணிகளை அனைத் துத் துறை அலுவலர்களும் மேற் கொண்டு வருகின்றனர்.  அதனடிப்படையில்  பெரம்ப லூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  பள்ளிகளில் செஸ் போட்டி நடத்து தல், விழிப்புணர்வு பேரணி, மாரத் தான், கையெழுத்து இயக்கம், ஓவி யம், தன் புகைப்படம் எடுத்தல், உறுதிமொழி, வண்ண கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக 22.7.2022 அன்று தனலட்சுமி சீனி வாசன் பொறியியல் கல்லூரி சார்பில் சுமார் 250 மாணவ-மாணவி கள் பங்கேற்று “நம்ம சென்னை நம்ம செஸ் நம்ம பெருமை” என்று  உறுதிமொழி ஏற்றனர். கல்லூரி மைதானத்தில் சதுரங்க விளை யாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.  மேலும் 188 நாடுகள் பங்கு பெற  இருப்பதால் இவ்விழாவை பெரு மைப்படுத்தும் விதமாக, 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் அ.சீனிவாசன் தொடங்கி வைத்தார். இது 44-வது  உலக செஸ் ஒலிம்பியாட் என்பதால் 44 மாணவ,மாணவிகளை கொண்டு செஸ் போட்டி நடை பெற்றது. 

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய  கடற்கரையில் பள்ளி கல்லூரி மாண வர்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையங்களில் வண்ணம் தீட்டி அழகுபடுத்துதல், நீச்சல் குளத்தில் செஸ் போட்டி நடத்துதல், கல்வி நிலையங்களுக்குச் சென்று செஸ் போட்டி நடத்துதல் உட்பட செஸ் விளையாட்டை நினைவுபடுத்தும் பல்வேறு அம்சங்களுடன் கூடிய நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. “நம்ம செஸ்  நம்ம பெருமை” என்ற வாசகம்  அடங்கிய பதாகைகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங் களில் ஒட்டப்படுகின்றன.

திருச்சிராப்பள்ளி
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடை பெற்ற உள்ளதையொட்டி, திருச்சி  மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள  நீச்சல் குளத்தில்விழிப்புணர்வு செஸ் விளையாட்டுப் போட்டி ஞாயிறன்று நடந்தது. இதில் சிறு வர்கள் முதல் பெரியவர் வரை நீச்சல் குளத்திற்குள் நின்றபடி செஸ் விளையாடினர்.