புதுச்சேரி, பிப். 24- புதுச்சேரியில் முக்கிய நகரங்களை இணைக்க 19 இருக்கைகள் கொண்ட இலகு ரக விமான சேவை விரைவில் தொடங்கப்படு கிறது. இதற்கான ஆய்வுப் பணிகளும் நடந்து வருகி றது. புதுச்சேரியில் லாஸ் பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளா கம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி முதல் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரி யில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப் பட்டன. பயணிகள் எண் ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்ன றிவிப்பு ஏதுமின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப் பட்டது. ஒன்றிய அரசின் பிராந்திய இணைப்பு திட்ட மான உதான் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு புதுச் சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தற்போது உள்ளன. இந்நிலையில் விரைவில் 19 இருக்கை கள் கொண்ட இலகுரக விமான சேவை தொடங்கப் படவுள்ளன. அதற்காக சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தது. அவ்விமானத்தை பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்த்தனர். இது தொடர்பாக சிறு விமான சேவையைத் தொடங்கும் தனியார் நிறுவனத்தின் சிஇஓ சதீஷ் குமார் கூறுகையில், “சிறிய நகரங்களை இணைக்க ஒன்றிய அரசின் உதான் திட்டத்தில் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்க உள்ளோம். அதை காட்சிப்படுத்த புதுச்சேரி விமான நிலையத்துக்கு எடுத்து வந்தோம். இந்த விமானத்தை செக் குடி யரசில் வாங்கினோம். இந்த விமானங்கள் இறங்க 600 மீட்டர் ஓடுதளம் போதுமா னது. முக்கிய நகரங்களுக்கு இயக்க திட்டமிட்டுள்ளோம். அதில் புதுச்சேரியும் ஒன்று என்று குறிப்பிட்டார்.