புதுச்சேரி, மே 6- புதுச்சேரி, காரைக்காலில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 92.41 விழுக்காட்டி னர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 விழுக்காடு குறைவாகும். அதே நேரத் தில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 0.56 அதிகரித்துள்ளது
புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டு டன் தமிழக பாடத்திட்டம் அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் நிறைவடைகிறது. வரும் கல்வியாண்டிலிருந்து 12 ஆம் வகுப்பில் சிபிஎஸ்இ அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகிறது. அதாவது, ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமலாக உள்ளது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6,566 மாணவர்கள் 7,446 மாணவிகள் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
மே 6 அன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 12,948 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 5,867 மாணவர்களும் 7,081 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் புதுவை அரசு மற்றும் தனியார் பள்ளி களை சேர்ந்த 5 ஆயிரத்து 867 மாணவர்கள், 7,081 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண் டைக் காட்டிலும் 0.26 விழுக்காடு குறைந்துள்ளது.
அதே நேரத்தில், புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 86.39 விழுக்காடாகும். காரைக்காலில் 81.65 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 85.35 விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்தாண்டை விட 0.58 அதிகமாகும்.
100 விழுக்காடு தேர்ச்சி
புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் 155 உள்ளன. இதில் 55 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவை யில் 51, காரைக்காலில் 4 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள அரசுப் பள்ளிகள் 55 . இதில் மடுகரை அரசு மேனி லைப் பள்ளி மட்டுமே நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது.
முழு மதிப்பெண்கள்
புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் களை 526 பேர் பெற்றுள்ளனர்.
கணினி அறிவியலில் 165, பிரெஞ்சு மொழிப் பாடத்தில் 135 , வணிகவியலில் 81, கணிப்பொறி பயன்பாட்டியல் 69, பொருளியல் 22, கணி தத்தில் 20, கணக்கு பதிவியலில் 15, இயற்பியல் 9, உயிரியலில் 4, வேதியியல் 3, விலங்கியல், வணிக கணிதம், மனையியல் ஆகிய பாடங்களில் தலா ஒருவர் என்றும் 100க்கு 100 முழு மதிப் பெண் பெற்றுள்ளனர்.