districts

தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதரவாக புதுச்சேரி அரசு: சிபிஎம்

புதுச்சேரி, ஜூலை 10- தனியார் உயர் கல்வி நிறுவனங்க ளுக்கு ஆதரவாக புதுச்சேரி  ஆட்சி யாளர்கள் செயல்படுகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வின் கீழ் வராத கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவ துணை படிப்புகள், பொறி யியல், சட்டம் மற்றும் விவசாயக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை தாமதமாகத் துவக்கி யிருப்பது தனியார் உயர்கல்வி நிறு வனங்களுக்கு அரசும் உயர் கல்வி துறையும் ஆதரவாக செயல்படு வதையே காட்டுகிறது. தமிழகத்தில் நீட் அல்லாத உயர் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்ற போது. புதுச்சேரியில் மட்டும் வினோத மான முறையில் நீட் தேர்வையும், சிபி எஸ்சி தேர்வு முடிவுகள் வராததைக் காரணம் காட்டி உயர் படிப்புகளுக்கான அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 15 நாட்களுக்குமேலாகத் தாமதப்படுத்தப்பட்டது. 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வந்ததும், புதுச்சேரியில் நீட் தேர்வின் கீழ் வராத உயர் படிப்பு களுக்கு சென்டாக் மூலம் மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டது. மேலும், மாணவர்களை திரட்டி உயர் கல்வித்துறை அலுவலகத்தை முற்று கையிடுவோம் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அவ சரஅவரசமாக ஒரு அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இதன் பின்னனியில் பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் நடப்பதாக தெரிகிறது.  அரசு கல்லூரிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இங்குப் படிக்கும் மாணவர்க ளுக்குப் பிஏ , பிஎஸ்சி, பிகாம் போன்ற படிப்புகளுக்கு ஆண்டுக் கட்ட ணம் மிக மிகக் குறைவு. ஆனால் இதே படிப்புகளைத் தனியார் கல்லூரிகளில் ரூ. 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை ஆண்டுக் கட்டண மாகச் செலுத்த வேண்டும். அரசு கல்லூரிகளுக்கான மாண வர்கள் சேர்க்கை தாமதபடுத்தப் பட்டதால் தங்கள் குழந்தைகளுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடும் என்பதாலும் விரும்பும் பாடப்பிரிவுகள் கிடைக்காது என்ற அச்சத்தில் வட்டிக்கு கடன் வாங்கியும், நகை களை விற்றும் தனியார் கல்வி நிறு வனங்களில் சேர்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இப்படித் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதன் மூலம் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வசூல் வேட்டை நடத்துவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆளும் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசுக்கு, ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியோ, தரமான கல்வி கிடைக்க வேண்டும்  என்பதைப் பற்றியோ சிறிதும் அக்கறையில்லை. தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாண வர்கள் அரசு சென்டாக் மூலம், அரசுக் கல்லூரியில் சேர்ந்தால் அந்த மாணவர்கள் தனியார் கல்லூரி களில் கட்டி உள்ள பணத்தைப் புதுச்சேரி அரசே திரும்ப வாங்கிக் கொடுக்கவேண்டும். இதற்கு என்று தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.  மீறுபட்சத்தில் பாதிக்கப் பட்ட மாணவர்களை திரட்டி அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்.  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.