districts

img

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலியானதற்கு பொதுப்பணித்துறையே காரணம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஜூன் 11- விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்புக்கு காரண மான அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலி யுறுத்தி உள்ளது. புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட ரெட்டி யார் பாளையம் புது நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் உள்ளது.  

சுத்திகரிப்பு நிலையம் போதிய பரா மரிப்பின்றி உள்ளதால்  அப்பகுதியில்  துர்நாற்றம் வீசுகிறது. இதனை சீர் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரி வித்துள்ளனர். மூன்று பேர் உயிரிழப்பு இந்நிலையில் புது நகரில் செவ்வாயன்று (ஜூன் 11) காலை வீடுகளிலி ருந்து பாதாள சாக்கடை தொட்டிக்கு கழிவு நீர் செல்லக்கூடிய குழாய் வழி யாக விஷவாயு வெளி யேறியுள்ளது.

 விஷவாயு வெளியேறியதால்  வீட்டில் இருந்த செந்தாமரை (வயது 75) என்ற மூதாட்டியும், அவரது மகள் காமாட்சியும் (50) ஆகியோர் மயக்கம் அடைந்துள்ளனர். அதே போல் அருகில் இருந்த வீட்டில் கழிவறைக்கு சென்ற செல்வராணி, (15) என்ற சிறுமியும் மயக்கம் அடைந்தார்.   அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரி சோதனை செய்த மருத்து வர்கள் ஏற்கெனவே இவர்கள் இறந்து விட்டதாக கூறினர். அதேபோல அப்பகுதி யில் உள்ள மற்ற வீடுகளி லும் ஒரு சிலர் மயக்கம் அடைந்தனர்.

இதில் பால கிருஷ்ணன், பாக்கிய லட்சுமி ஆகியோர்  மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர்.   பாதிக்கப்பட்டவர்களை  சுகா தாரத்துறையின் சார்பில் மருத்துவர்கள், செவி லியர்கள் பரிசோதனை செய்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் தீயாக பரவியது.

இதில் பால கிருஷ்ணன், பாக்கிய லட்சுமி ஆகியோர்  மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தீவிர  சிகிச்சை பெற்று வருகின்றனர்.   பாதிக்கப்பட்டவர்களை  சுகா தாரத்துறையின் சார்பில் மருத்துவர்கள், செவி லியர்கள் பரிசோதனை செய்தனர். இச்சம்பவம் புதுச்சேரியில் தீயாக பரவியது.

மார்க்சிஸ்ட்கட்சி ஆறுதல்

பாதிக்கப்பட்ட பகுதி மக்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், அலுவலக செயலாளர் ஜோதிபாசு, ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் உரிய பராமரிப்பின்றி செயல்பட்டதும், அதிலி ருந்து வெளியான விஷ வாயுவாயு உயிரி ழப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது. எனவே அலட்சியமாக செயல்பட்ட  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். இறந்தவர்க ளுக்கு உரிய நிவா ரணத்தை புதுச்சேரி அரசு உடனடியாக அறி விக்க வேண்டும் என்று ஆர். ராஜாங்கம் வலி யுறுத்தியுள்ளார்.