புதுச்சேரி, டிச. 27- புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி உற்பத்தி யாளர்கள் பால் பண்ணையை முற்று கையிட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.45ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடகா, கேரள மாநிலங்களில் வழங்குவது போல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். 75 விழுக்காடு மானிய விலையில் தீவனத்திற்கான பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பாண்லே ஒன்றியத் தேர்தலை உடனே நடத்த வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அரசு சார்பில் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை யில் குருமாம்பேட்டிலுள்ள பாண்லே பால் பண்ணை முன்பு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று (டிச. 27) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சி.பத்மநாபன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வே.சங்கர் வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் செயலாளர் ரகு, அன்புமணி, முத்தையன், முத்து நாராயணன், சிதம்பரநாதன், பால முருகன், பாலூ, சங்கர், பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் உறுதி
இந்த போராட்டத்தை தொடர்ந்து, பால் பண்ணை தலைமை நிர்வாகி மலர்க்கண்ணன் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, “இன்னும் இரண்டொரு நாட்களில் கொள்முதல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். திட்டமிட்டபடி கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை என்றால் டிசம்பர் 30 ஆம் தேதி பால் பண்ணைக்கு பால் அனுப்பப் போவதில்லை என்று விவசாயிகள் எச்சரித்தனர்.